Published : 01 Jan 2019 10:12 AM
Last Updated : 01 Jan 2019 10:12 AM

திருவாரூர் தேர்தல்: அதிமுக அறிவிப்பு 

திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர், நாளை மற்றும் 3-ம் தேதி விருப்ப மனு பெற்று விண்ணப் பிக்கலாம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

திருவாரூர் தொகுதி இடைத் தேர்தல் வரும் ஜனவரி 28-ம் தேதி நடக்கும் என்றும், இதற்கான வேட்புமனுத்தாக்கல் ஜன.3-ம் தேதி தொடங்கி 10-ம் தேதி வரை நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகம் வெளி யிட்ட அறிவிப்பு:

திருவாரூர் சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் நடக்க உள்ளதை முன்னிட்ட, அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் வரும் ஜன.2-ம் தேதி (நாளை) காலை 9.30 மணி முதல் ஜனவரி 3-ம் தேதி மாலை வரை விண் ணப்ப கட்டணமாக ரூ.25 ஆயிரம் செலுத்தி, தலைமை அலுவலகத்தில் விண்ணப்பப் படிவத்தை பெறலாம்.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஜன.3-ம் தேதி மாலைக்குள் திரும்ப வழங்கலாம். பெறப்படும் விண் ணப்பங்கள் ஜன.4-ம் தேதி பரிசீலிக்கப்படும்,

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x