Published : 09 Jan 2019 08:00 PM
Last Updated : 09 Jan 2019 08:00 PM
தமிழகம் முழுவதும் சட்டவிரோத பேனர்கள் வைத்தற்காக எத்தனை பேர் மீது குற்ற வழக்கு பதியப்பட்டுள்ளது என தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விதிமீறல் பேனர்கள் வைப்பதை தடுக்க வேண்டும் என்றும், தடுக்க நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு விசாரித்தது.
மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நடைபாதையில் நடந்து செல்வோர்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அரசியல் கட்சியினர் சாலைகளில் பேனர் வைக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும், பி.ராஜமாணிக்கம் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சட்டவிரோத பேனர்கள் வைக்கப்படுவதை தடுக்க அரசு மற்றும் காவல் துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழுவை ஏன் அமைக்க கூடாது எனவும் கேள்வி எழுப்பினர்.
தமிழகம் முழுவதும் சட்டவிரோத பேனர் வைத்தற்காக எத்தனை பேர் மீது குற்ற வழக்குகள் பதியப்பட்டுள்ளன, எத்தனை வழக்குகளில் விசாரணை நிலுவையில் உள்ளன என்பது குறித்து பிப்ரவரி 13-ம் தேதிக்குள் அரசு பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT