Published : 11 Jan 2019 08:25 AM
Last Updated : 11 Jan 2019 08:25 AM

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நேரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வீடுகளில் பறிமுதல் செய்த ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல்: ஆவணங்களை தங்களுக்கும் வழங்க மனுதாரர்கள் கோரிக்கை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நேரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலரது வீடுகளில் பறிமுதல் செய்த ஆவணங்களை வருமான வரித்துறை சீலிட்ட கவரில் உயர் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தது. மேலும் ரூ. 4.71 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெய லலிதாவின் மறைவைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது டிடிவி தினகரன் அணியினர் ஒரு பிரிவாகவும், ஓபிஎஸ் தலைமை யிலான பிரிவினர் மற்றொரு அணியாகவும் போட்டியிட்டனர். தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலரது வீடுகளில் வரு மான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தி வாக்காளர் களுக்கு பட்டுவாடா செய்ய விருந்த ரொக்கப் பணம் உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்த னர். அதில் தற்போதைய முதல்வர் கே.பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர் களின் பெயர்களும் இடம்பெற்றி ருந்ததால் அந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

வாக்காளர்களுக்கு பணப்பட்டு வாடா செய்தது தொடர்பாக அபிராம புரம் போலீஸார் குற்றம்சாட்டப் பட்டவர்களின் பெயர்களைக் குறிப் பிடாமல் எப்ஐஆர் பதிவு செய்தனர். இதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதி யில் திமுக சார்பில் போட்டியிட்ட மருதுகணேஷ், இந்த வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் எம்.சத்திய நாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடந்தது.

அப்போது வருமான வரித்துறை யின் முதன்மை தலைமை ஆணை யர் பி.முரளிகுமார் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘‘கடந்த 2017 ஏப்.7 அன்று அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலரது வீடுகளில் நடத்தப் பட்ட சோதனையில், ஆர்.கே. நகர் இடைத் தேர்தலுக்காக வாக் காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆதாரங் களை பறிமுதல் செய்தோம். மேலும் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இருந்து ரூ.3 லட்சம், ஜெ.சீனிவாசனிடமிருந்து ரூ.3 லட்சம், கல்பேஷ் எஸ்.ஷாவிட மிருந்து ரூ.1 கோடியே 10 லட்சம், சாதிக் பாட்ஷாவிடமிருந்து ரூ.6 லட்சம், கார்த்திகேயனிடமிருந்து ரூ.8 லட்சம், நடிகர் ஆர்.சரத் குமாரிடமிருந்து ரூ.11 லட்சம், ஆர்.சின்னத்தம்பியிடம் இருந்து ரூ.20 லட்சம், டாக்டர் செந்தில்குமாரிடம் இருந்து ரூ.15 லட்சம், நயினார் முகமதுவிடம் இருந்து ரூ.2 கோடியே 95 லட்சம் என ரூ. 4.71 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் இந்த ஆவணங்கள் 2017 ஏப்.9 அன்று இந்திய தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் இது தொடர்பான முக்கிய ஆவணங் களை நாங்கள் எந்த பொதுத் தளங்களிலும் வெளியிடவில்லை. அவற்றின் அடிப்படையில் சம்பந்தப் பட்டவர்களிடம் விசாரணை நடத்தப் பட்டு வருகிறது. இதற்கான கால அவகாசம் வரும் டிசம்பர் மாதம் வரை எங்களுக்கு உள்ளது’ என அதில் தெரிவித்து இருந்தார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், “வருவானவரித் துறை தற்போது சீலிட்ட கவரில் தாக்கல் செய்துள்ள முக்கியமான ஆவணங்களின் அடிப்படையில்தான் தேர்தல் ஆணையம் ஆர்.கே. நகர் இடைத் தேர்தலையே ரத்து செய்தது. இந்த ஆவணங்களில் வெளிப்படைத் தன்மை தேவை. ஏனெனில் ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் இதுபோன்ற முக்கியமான வழக்கு களில் ஆவணங்களில் ரகசியம் காக்கக்கூடாது. அது வழக்கு விசாரணையையே பாதிக்கும் என பல்வேறு தீர்ப்புகளில் சுட்டிக்காட்டி உள்ளது. இது தொடர்பாக விரிவாக வாதிட உள்ளேன்” என வாதிட் டார்.

இதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை 18-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x