Published : 20 Sep 2014 10:09 AM
Last Updated : 20 Sep 2014 10:09 AM

ரூ.500 கோடிக்கு பங்கு விற்பனை தமிழக அரசு முடிவு

தமிழக அரசு நிதித்துறையின் சார்பில் அரசு முதன்மைச் செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ரூ.500 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 10 ஆண்டு கால பிணையப் பத்திரங்கள் ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளன. இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை - கோட்டை அலுவலகத்தில் செப்டம்பர் 23-ம் தேதி நடத்தப்படும். போட்டி ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 முதல் பிற்பகல் 12 மணிக்குள்ளாகவும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 முதல் 11.30 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் (E-Kuber) மின்னணு படிவத்தில் (Electronic Format) சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x