Published : 16 Jan 2019 02:23 PM
Last Updated : 16 Jan 2019 02:23 PM
மக்களை விலைக்கு வாங்க சிலர் காத்திருக்கிறார்கள் என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சியில் இன்று மக்கள் முன்னிலையில் பேசிய கமல்ஹாசன், "கண்டிப்பாக எழுவோம் என்று நம்புகிறேன். உங்கள் கனவுகள் எங்கள் கண்களில் தெரிய வேண்டும். உங்கள் கனவுகளை எட்ட நாங்கள் பாடுபடுவோம்.
இளைய தலைமுறை இந்திய அரசியல் மற்றும் தமிழக அரசியலை மாற்றி அமைக்க உள்ளது. நண்பர்களுக்கு நல்வழி காட்டும் கடமை உங்களிடம் உள்ளது.
விவசாயிக்கு விஞ்ஞான ரீதியான அறிவுரைகளும் கிடைக்க வேண்டும். விவசாயிகள் நிறைந்த கட்சியாக மக்கள் நீதி மய்யம் இருக்கும்.
மக்கள் மத்தியில் ஓட்டு போடும் விழிப்புணர்வை முதலில் உருவாக்க வேண்டும். ஓட்டுக்குப் பணம் கொடுப்பதும், பெறுவதும் என அடுத்த 5 ஆண்டுகளுக்கு உங்களை விலைக்கு வாங்க சிலர் காத்திருக்கிறார்கள்.
பொள்ளாச்சியில் கட்சியின் மேற்கு மண்டல அலுவலகம் திறந்தது மகிழ்ச்சி. தலைமையைச் சந்திக்க தொண்டர்கள் காத்திருக்கத் தேவையில்லை.தொண்டர்களுக்காக இந்தத் தலைமை அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது".
இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT