Published : 04 Jan 2019 09:58 AM
Last Updated : 04 Jan 2019 09:58 AM
சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தற்போது வடக்கு திசையில் இருந்து தமிழகம் நோக்கி குளிர்ந்த காற்று வீசி வருகிறது. அதன் காரணமாக தமிழக பகுதிகளில் குளிர் அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை அளவின்படி, மலைப் பிரதேசங்களில் மிகக் குறைந்த அளவாக வால்பாறையில் 3.5 டிகிரி செல்சியஸ், உதகையில் 4.4 டிகிரி, குன்னூரில் 7.8 டிகிரி, கொடைக்கானலில் 8.3 டிகிரி செல்சியஸ் குளிர் பதிவாகியுள்ளது. நிலப் பகுதியில் மிகக் குறைந்த அளவாக தருமபுரி மற்றும் கரூர் பரமத்தியில் 15 டிகிரி, வேலூர், திருத்தணி, நாமக்கல் ஆகிய இடங்களில் தலா 15.5 டிகிரி செல்சியஸ் குளிர் பதிவாகியுள்ளது. இது மேலும் 10 நாட்கள் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT