Published : 28 Jan 2019 10:41 AM
Last Updated : 28 Jan 2019 10:41 AM
நிகழ்ச்சியில் ‘இந்து தமிழ்’ நாளிதழ் நடுப்பக்க ஆசிரியர் சமஸ் பேசியது:
ஒரு சமூகத்தின் எழுச்சிக்கு கற்பனையும் கனவுகளும் முக்கியம். படைப்பூக்கம் முக்கியம். இந்தியா என்கிற நாட்டை அரசியல்வாதிகள் மட்டும் வடிவமைக்கவில்லை. அதிகார வர்க்கமும் சேர்ந்துதான் வடிவமைக்கிறது; வழிநடத்துகிறது. ஆகையால்தான், அந்த அதிகார வர்க்கத்தில் நம்முடைய தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம், எண்ணம், சிந்தனை அதிகமாக பிரதிபலிக்க வேண்டும் என்ற நோக்கில் இப்படி ஒரு நிகழ்ச்சியை ‘இந்து தமிழ்’ நாளிதழ் நடத்துகிறது.
காந்திக்கு கிராமங்கள் முக்கியத்துவம் வகிக்கும் இந்தியா என்ற ஒரு கனவு இருந்தது. அம்பேத்கருக்கு சாதி இழிவு நீக்கப்பட்ட இந்தியா என்ற ஒரு கனவு இருந்தது. அண்ணாவுக்கு ஒவ்வொரு மாநிலமும் சமமான அந்தஸ்தும் அதிகாரமும் வகிக்கும் இந்தியா என்ற ஒரு கனவு இருந்தது. நமக்கு இன்றைக்கு என்ன கனவு இருக்கிறது? நம்முடைய முன்னோர் விட்டுச் சென்ற கனவை நனவாக்க நாம் என்ன செய்யப் போகிறோம்? என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT