Published : 09 Jan 2019 08:46 PM
Last Updated : 09 Jan 2019 08:46 PM

அன்னிய செலாவணி மோசடி வழக்கு: சசிகலாவிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீதான குற்றச்சாட்டு பதிவு.   வரும் 28-ம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை  நடைபெறும் என எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் அறிவிப்பு.

ஜெஜெ டிவிக்கு வெளிநாட்டில் இருந்து எலக்ட்ரானிக் உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா மற்றும் பாஸ்கரன் ஆகியோருக்கு எதிராக அந்நிய செலாவணி மோசடி வழக்குகளை அமலாக்கப் பிரிவு பதிவு செய்தது.

சசிகலா, பாஸ்கரன் இரண்டு பேரும் தொடர்புடையதாக 3 வழக்குகளும், தனி தனியாக 2 வழக்குகள் என மொத்தம் 5 வழக்குகள் எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன.

இவற்றில், 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் பாஸ்கரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. பின்,  பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு எதிராக, காணொலி காட்சி மூலம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

குற்றச்சாட்டு பதிவுக்கு பின், ஆவணத்தில் கையெழுத்திடுவது போன்ற சில நடைமுறைகள் பின்பற்றப்படாததால், சசிகலாவுக்கு எதிராக மறு குற்றச்சாட்டு பதிவு செய்வதற்காக  சசிகலாவை ஆஜர்படுத்த நீதிபதி வாரண்ட் பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் நேரில் ஆஜராக பிறப்பித்த வாரண்டை ரத்து செய்து. சசிகலாவிடம் மீண்டும் வீடியோ கான்பரன்சில் குற்றச்சாட்டு பதிவு செய்து வழக்கை 4 மாததில் முடிக்க உத்தரவிட்டது.

அதன்படி சசிகலா மீதான வழக்கு  எழும்பூர் பொருளாதார குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடைபெற்று வருகிறது, சசிகலா மீதான 4 வழக்குகளில், 2 வழக்கில் ஏற்கனவே குற்றச்சாட்டு பதிவு முடிவுற்ற நிலையில்,  இன்று எழும்பூர் மாஜிஸ்திரேட் நடுவர் மன்ற நீதிபதி மலர்மதி முன்பு வழக்கு  மீண்டும் விசாரணைக்கு வந்தது,

தொடர்ந்து, வழக்கு விசாரணையை வரும் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படாமல் உள்ள 2 வழக்குகளில்  குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் என்றும், சிறையில் இருந்தவாறு வீடியோ கான்பரன்சிங் மூலம் குற்றச்சாட்டு பதிவுக்கு சசிகலா ஆஜராக வேண்டும்  எனவும் உத்தரவிட்டு  வழக்கு விசாரணையை ஜனவரி 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x