Published : 07 Jan 2019 09:23 AM
Last Updated : 07 Jan 2019 09:23 AM

திருமணமான பெண் எஸ்ஐக்கு கட்டாய தாலி கட்ட முயன்ற ஊர்க்காவல் படை வீரர் கைது: புழல் சிறையில் அடைப்பு

திருமணமான பெண் எஸ்ஐக்கு கட்டாய தாலி கட்ட முயன்றதாக ஊர்காவல் படை வீரரை சென்னை போலீஸார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்தவர் மணிமேகலை (24). இவர் தற்போது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு எஸ்ஐயாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2016-ல் நேரடியாக போலீஸ் எஸ்ஐயாக தேர்வு செய்யப்பட்டவர். திருமணமான இவர் வேலூர் மாவட்டம் காட்பாடியில் பயிற்சி எஸ்ஐயாக பணி செய்தபோது அதே காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படை பிரிவில் பணி செய்த காட்பாடியைச் சேர்ந்த பாலசந்திரனின் (25) அறிமுகம் கிடைத்துள்ளது.

இந்நிலையில், பெண் எஸ்ஐயை பாலச்சந்திரன் நேசித்ததாகவும் திருமணம்செய்துகொள்ள கட்டாயப்படுத் தியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், மணிமேகலை நுங்கம்பாக்கத்துக்கு பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் பாலச்சந்திரன் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி போனில் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பாலச் சந்திரனை சென்னை எழும் பூருக்கு வரவழைத்து பெண் எஸ்ஐ அவரை எச்சரித்துள் ளார்.

அப்போது பாலச்சந்திரன் கத்தி முனையில் பெண் எஸ்ஐக்கு கட்டாய தாலி கட்ட முயன்றுள்ளார். இதுகுறித்து மணிமேகலை எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து பாலச்சந்திரனை கைது செய்துள்ளனர்.

பின்னர், அவரை நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x