Published : 25 Jan 2019 10:11 AM
Last Updated : 25 Jan 2019 10:11 AM
கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக வி.செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக, திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘கரூர் மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக வி.செந்தில் பாலாஜி கரூர் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். நன்னியூர் ராஜேந்திரன் திமுக நெசவாளர் அணி தலைவராக நியமிக்கப்படுகிறார்’ என தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரனின் அமமுகவில் முக்கிய நிர்வாகியாக செயல்பட்டு வந்த வி.செந்தில் பாலாஜி, சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். கரூரில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தையும் நடத்தினார். இந்நிலையில், திமுகவில் அவருக்கு மாவட்ட பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT