Published : 03 Jan 2019 09:47 AM
Last Updated : 03 Jan 2019 09:47 AM
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கில் உணவு பொருட்களை விற்பனை செய்த கடையில் இருந்து உணவுப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனால் வியாபாரிகள் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. 1-ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வந்தது. தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தும் வியாபாரிகளிடம் உள்ளாட்சி அதிகாரிகள் அப்பொருட்களைப் பறிமுதல் செய்தும் அவர்களுக்கு அபராதம் விதித்தும் வருகின் றனர்.
மளிகை கடை, பேக்கரிகளில்
இந்நிலையில் உள்ளகரம், புழுதிவாக்கம், வாணுவம்பேட்டை பகுதியில் மளிகை பொருட்கள், உணவு பொருட்கள் போன்றவை மளிகை கடைகள், பேக்கரிகளில் விற்பனை செய்யப்பட்டு வந்தன.
இதனையடுத்து பெருங்குடி மண்டலத்தைச் சேர்ந்த மாநக ராட்சி அதிகாரிகள் நேற்று அனைத் தையும் பறிமுதல் செய்தனர். அப்போது வியாபாரிகளுக்கும், அதிகாரிகளுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக வியாபாரி சங்கத் தலைவர் கிருஷ்ண குமார் தலைமையில் வியாபாரிகள், புழுதி வாக்கத்தில் உள்ள பெருங்குடி மண்டல அலுவலகத்தை முற்றுகை யிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் மண்டல அதிகாரியை சந்தித்து மனு அளித்தனர். அப்போது எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. அரசின் உத்தரவை நாங்கள் செயல் படுத்துகிறோம். உணவு பாதுகாப்பு துறையிடம் இதுதொடர்பாக புகார் தெரிவிக்க அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
இதுகுறித்து வியாபாரிகள் சங்கத் தலைவர் கிருஷ்ண குமார் கூறியதாவது:
தடை செய்யப்பட்ட பிளாஸ் டிக் பொருட்களை நாங்கள் பயன்படுத்துவதில்லை. பொது மக்களுக்கும் வழங்குவதில்லை. ஏற்கெனவே பிளாஸ்டிக் பைகளில் அடைத்து வைக்கப்பட்ட பொருட் களை விற்பனை செய்கிறோம். நாங்கள் சொல்வதை அதிகாரிகள் கேட்காமல் பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
இதனால் பல ஆயிரம் ரூபாய் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT