Published : 03 Dec 2018 10:00 AM
Last Updated : 03 Dec 2018 10:00 AM

சென்னையில் விவசாயிகளுடன் சந்திப்பு: விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் - மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தல்

புயல் பாதித்த மாவட்டங்களில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் இருந்து கடந்த மாதம் 27-ம் தேதி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் டெல்லி சென்றனர். அங்கு நடந்த விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற பின்னர் ரயில் மூலம் நேற்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தனர்.

இந்த நிலையில், விவசாய கடனை தள்ளுபடி செய்யக்கோரி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் திடீரென விவசாயிகள் போராட் டத்தில் ஈடுபட்டனர். இதை யடுத்து, ரயில்வே போலீஸார் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டனர். விவசாயிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், போராட் டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்தது தன் னுடைய ஆதரவை தெரிவித்தார்.

அப்போது, கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற அறவழியில் அரசுக்கு அழுத்தத்தை கொடுப்போம். புயல் பாதித்த மாவட்டங்களில் நிவாரண பணிகள் மந்த நிலையில்தான் உள்ளது. இதனை எதிர்கட்சிகளின் குரலாக அரசு பார்க்க கூடாது. மக்களின் குரலாக தான் பார்க்க வேணடும். தற்போதைக்கு விவாதம் நடத்த நேரம் இல்லை. கூரை, குடிநீர் இல்லாமல் பல ஊர்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புயல் பாதிப்பு பணிகளில் அரசியல் செய்யவில்லை. துரிதப்படுத்த வேண்டும் என்று எடுத்து கூறுவது நாங்கள் செய்யும் உதவியாகத்தான் அரசு பார்க்க வேண்டும். விமர்சனம் செய்வதற்கு நிறைய உள்ளது. பல கிராமங்களுக்கு அதிகாரிகள் இன்னமும் செல்லவில்லை.

மத்திய அரசு அளித்துள்ள முதல்கட்ட நிதி உதவிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இது மட்டும் போதாது தொடர்ந்து வேகமாக செயல்பட வேண்டும்.

விவசாயிகள் தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி தான் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட னர். அவர்களுடைய பசியை எடுத்து கூறுகின்றனர்.

அதனை சரி செய்யாமல், நீங்கள் கேட்ட முறை தவறு என்று கூறுவது விமர்சனம் செய்வது மட்டும் தான். அவர்களுடைய கோரிக்கை அப்படியே தான் உள்ளது.

விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கிவிட்டால் மட்டும் போதாது. அவர்கள் அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்கு பல ஆண்டுகளாகும்.

விவசாய கடன் தள்ளுபடி செய்ய போவதாக துணை முதல் வர் சொல்லியிருப்பது மனதில் இருந்தால் மட்டும் போதாது. புய லால் பாதிக்கப்பட்ட மாவட்டங் களில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x