Published : 03 Dec 2018 09:48 AM
Last Updated : 03 Dec 2018 09:48 AM
வில்லிவாக்கம் ஜெகநாதன் தெருவைச் சேர்ந்தவர் வாசு. மாத வரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணி செய்து வந்தார். இன்னும் சில மாதங் களில் பணி ஓய்வு பெற உள்ளார். இவர் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு அதேபோல் செய்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் வாசு மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். சிறுமியின் பெற்றோர் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து சிறப்பு உதவி ஆய்வாளர் வாசு மீது போக்சோ சட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT