Published : 16 Dec 2018 08:18 AM
Last Updated : 16 Dec 2018 08:18 AM

உச்ச நீதிமன்ற உத்தரவால் முழு அடைப்பு; பட்டாசு ஆலை அதிபர்களுடன் பிரதமரை சந்திக்க முடிவு: அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தகவல்

உச்ச நீதிமன்ற உத்தரவால் பட்டாசு ஆலைகளின் முழு அடைப்புப் போராட்டம் தொடரும் நிலையில், பட்டாசு ஆலை உரிமையாளர் களுடன் பிரதமரை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித் தார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பினால் விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளை திறக்க முடியாமல் உரிமையாளர்கள் தவிக்கின்றனர். இதனால் நாடு முழுவதும் இத் தொழிலில் நேரடியாகவும், மறை முகமாகவும் ஈடுபட்டுள்ள சுமார் ஒரு கோடி தொழிலாளர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், பட்டாசு ஆலை உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சிவகாசி டான்பாமா அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் ஆயிரத் துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலை உரிமையாளர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது: பட்டாசு ஆலை பிரச்சினையை தீர்க்க என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன். வரும் 18-ம் தேதி முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன். அதைத் தொடர்ந்து அவரது அனுமதியுடன் பிரதமரை சந்திக்கலாம். பிரதமரி டம் பட்டாசுத் தொழிலுக்கு ஏற்பட்டு உள்ள பாதிப்பை எடுத்துக் கூறி இப் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் என்றார்.

டான்பாமா அமைப்பின் நிர்வாகி கள் பேசும்போது, பட்டாசு ஆலை பிரச்சினைகளைத் தீர்க்கக் கோரி விருதுநகரில் அடுத்த வாரம் பெரிய அளவில் போராட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினர். கூட்டத்தில் தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ஆசைத்தம்பி, பொதுச் செயலாளர் மாரியப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x