Published : 15 Dec 2018 09:28 AM
Last Updated : 15 Dec 2018 09:28 AM

சேலம் – சென்னை பசுமை வழிச்சாலைக்கான  நிலஆர்ஜித வழக்குகளின் தீர்ப்பு தள்ளிவைப்பு: எழுத்துப்பூர்வமான வாதங்களை ஜன. 4-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவு

சேலம் - சென்னை பசுமை வழிச் சாலை திட்டத்துக்காக நிலஆர்ஜி தம் செய்வதை எதிர்த்து தொடரப் பட்ட வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.

மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின் சேலம் சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் எட்டு வழித்தடங்கள் கொண்ட பசுமை வழிச்சாலை அமைக்க சேலம், தருமபுரி, காஞ்சி புரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 1,900 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது. இத்திட்டத்துக்காக நிலஆர்ஜிதம் செய்வதற்கு அப்பகுதி விவசாயி கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், இத்திட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி தருமபுரி யைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ண மூர்த்தி, தருமபுரி எம்பி அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் துள்ளனர்.

இந்த வழக்கு விசாரணை கடந்த ஜூலை முதல் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்து வந்தது. மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் சக்தி வேல், ஏ.பி.சூர்யபிரகாசம், கே.பாலு, வி.பாலு, கனகராஜ், நாகசைலா ஆகியோரும், தமிழக அரசு தரப்பில் சிறப்பு பீளீடர் சி.திருமாறன், மத்திய அரசு தரப்பில் உதவி சொலிசிட்டர் ஜென ரல் ஜி.கார்த்திகேயனும் ஆஜராகி வாதிட்டனர்.

இத்திட்டத்துக்காக 5 மாவட்டங் களிலும் நிலங்களைக் கையகப் படுத்த நீதிபதிகள் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந் தனர்.

அதேபோல, இத்திட்டத்துக்கு மத்திய அரசின் சுற்றுச் சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளிக்காவிட்டால் இத்திட்டத்தைத் தொடர மாட்டோம் என தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணைய மும் உத்தரவாதம் அளித்திருந்தது.

இதற்கிடையே இத்திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீதான தாக்குதல் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தர விட்டிருந்தனர். மேலும் இத்திட்டத் தின் நீட்சியாக நெடுஞ்சாலைத் துறை ஆணையம் வெளியிட்டி ருந்த அறிவிப்பாணை குறித்தும் நீதிபதிகள் கேள்வி எழுப்பி யிருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று நெடுஞ்சாலைத் துறை ஆணையம் சார்பில் உதவி சொலி சிட்டர் ஜெனரல் ஜி. கார்த்திகேயன் ஆஜராகி, திட்ட இயக்குநர் பி.டி.மோகன் சார்பில் ஓர் அறிக் கையை தாக்கல் செய்தார். அதில், தேசிய நெடுஞ்சாலைகள் சட்டம் 1956-ன் பிரகாரம் திட்டத்துக்கான ஆரம்பகட்ட ஏரியல் சர்வே அடிப் படையிலேயே 3ஏ என்ற அந்த அறிவிப்பாணை வெளியிடப் பட்டது.

சம்பந்தப்பட்ட நிலத்துக்குள் அரசு அதிகாரிகள் யாரும் செல்ல வில்லை. நிலஆர்ஜிதம் தொடர் பான 3டி அறிவிப்பாணை இன்னும் வெளியிடப்படவில்லை. இத்திட்டத் துக்காக புதிதாக சர்வே செய்யப்பட்டு, கிராமப்புறங் களில் உள்ள வீடுகள் இடிக்கப் படுவதையும், தீர்த்தாமலை வனப் பகுதிக்குள் சாலை செல்வதையும் தவிர்த்து இருக்கிறோம்.

இதைத் தவிர்த்து இந்த அறிவிப் பாணைகள் எந்த விதத்திலும் வழக்கு விசாரணையில் குறுக்கிட வில்லை” என தெரிவிக்கப் பட்டிருந்தது.

அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அனைத்து தரப்பு வாதங் களும் முடிவடைந்த நிலையில், எழுத்துப்பூர்வமான வாதங்களை ஜன. 4-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x