Published : 26 Dec 2018 08:46 AM
Last Updated : 26 Dec 2018 08:46 AM

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய் கொலை: மகள் உட்பட 3 பேர் புழல் சிறையில் அடைப்பு - முகநூல் பழக்கத்தால் நடந்த விபரீதம்

திருவள்ளூர் அருகே உள்ள காக்களூர் - ஆஞ்சநேயபுரம் 8-வது தெருவைச் சேர்ந்தவர்கள் திருமுருகநாதன் - பானுமதி(50). இத்தம்பதிக்கு 2 மகள்கள் உள்ள னர். இதில், இளைய மகள் தேவி பிரியா(19), பட்டாபிராம் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, தேவி பிரியாவுக்கும் ஆந்திர மாநிலம் தடா அருகே உள்ள தொண்டூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்(24) என்பவருக்கும் இடையே முகநூல் மூலம் நட்பு ஏற்பட்டு பின்பு காதலாக மாறியுள்ளது.

இந்த விஷயம் தாய் பானுமதிக்கு தெரிய வரவே, மகள் தேவிபிரியா வின் காதலுக்கும் எதிர்ப்பு தெரி வித்துள்ளார்.

இதனையடுத்து, பானுமதியைக் கொலை செய்ய தேவிபிரியாவும், சுரேஷும் திட்டமிட்டுள்ளனர். அதன் படி, ஐடிஐ படிக்கும் முகநூல் நண்பர்களான தஞ்சை மாவட் டம், கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தைச் சேர்ந்த சிறுவன் மற்றும் கோட்டூரைச் சேர்ந்த அஜீத்குமார்(19) ஆகியோரை தேவிபிரியா தொடர்பு கொண் டுள்ளார்.

அவர்களிடம், ’’நான் ஒருவரைக் காதலிக்கிறேன். அவர் வேறு சாதியைச் சேர்ந்தவர் என்பதால் எங்கள் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். என்னை யும் வீட்டில் அடைத்து வைத் துள்ளனர். ஆகவே, என்னை மீட்டு, என் காதலனுடன் சேர்த்து வைக்க உதவ வேண்டும்’’ என்று பேசியுள்ளார்.

இதனை நம்பிய அஜீத்குமா ரும், சிறுவனும் ரயில் மூலம் நேற்று முன்தினம் சென்னை வந்தனர். அங்கிருந்து மின்சார ரயிலில் புட்லூர் ரயில் நிலையம் வந்து, மதியம் தேவிபிரியாவின் வீட்டுக் குள் நுழைந்துள்ளனர்.

வீட்டில் இருந்த பானுமதி, ’யார் நீங்கள்?’ எனக் கேட்டு அவர்களைத் தடுத்துள்ளார். அவரை அஜீத்குமாரும், சிறுவனும் கீழே தள்ளி விட்டனர். இதில் நிலை தடுமாறிய பானுமதி கீழே விழுந்தார். அப்போது வீட்டினுள் இருந்து வந்த தேவிபிரியா, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், பானுமதி யின் மார்பு மற்றும் வயிற்றில் சரமாரியாகக் குத்தியுள்ளார். மேலும் அஜீத்குமாரும், சிறுவனும் பானுமதியை கத்தியால் குத்தி யுள்ளனர். அவர்களை உடனே தப்பித்துச் சென்றுவிடும்படி தேவி பிரியா கூறியுள்ளார்.

பானுமதியின் அலறல் சத்தம் கேட்டு வீட்டின் உள்ளே இருந்து வந்த மூத்த மகள் சாமுண்டீஸ்வரியிடம், ‘‘நகை திருட வந்த 2 பேர் அம்மாவைக் கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டதாகக்’’ கூறி தேவிபிரியா அழுது நாடகமாடியுள்ளார்.

படுகாயமடைந்த பானுமதியை, திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில், தேவிபிரியா, தன்னைக் கத்தி யால் குத்திய தகவலை சாமுண் டீஸ்வரியிடம் பானுமதி தெரிவித் துள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பானுமதி, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப் பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனிடையே, பானுமதியைக் கொலை செய்துவிட்டு தப்பி யோடிய அஜீத்குமாரும், சிறுவனும் புட்லூர் ரயில் நிலையம் செல்ல, அப்பகுதியில் நின்ற பொதுமக்களிடம் வழி கேட்டுள்ள னர்.

ஆடைகளில் ரத்தக் கறை களோடு இருந்த அவர்களைக் கண்டு சந்தேகமடைந்த பொது மக்கள், இருவரையும் பிடித்து கட்டி வைத்து, விசாரிக்கும் போது அவர்கள் பானுமதியைக் கத்தியால் குத்தியது தெரியவந்தது.

இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்து விசாரித்த திருவள்ளூர் தாலுக்கா போலீஸார், தேவிபிரியா, அஜீத்குமார், சிறுவன் ஆகிய 3 பேரையும் கைது செய்த னர். பானுமதியைக் கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய தேவி பிரியாவின் காதலன் சுரேஷை ஆந்திர மாநிலம், தடாவில் போலீ ஸார் நேற்று காலை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட தேவி பிரியா, சுரேஷ் உள்ளிட்ட 4 பேரில், தேவிபிரியா, அஜீத்குமார், சிறுவன் ஆகிய 3 பேர் நேற்று மாலை திருவள்ளூர் ஜெ.எம்-1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டனர்.

தொடர்ந்து தேவிபிரியா, அஜீத் குமார் ஆகிய இருவரும் புழல் மத்திய சிறையிலும், சிறுவனுக்கு 18 வயது பூர்த்தியாகாததால், செங்கல் பட்டு சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியிலும் அடைக்கப்பட்டனர். சுரேஷிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x