Published : 18 Dec 2018 08:12 AM
Last Updated : 18 Dec 2018 08:12 AM

தகுதியற்றவர்கள் தேர்வு என புகார்: புதிதாக அரசு வழக்கறிஞர்களை நியமிக்க இடைக்கால தடை

சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு புதிதாக அரசு வழக்கறிஞர்களை நியமிக்க இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற அரசு வழக்கறி ஞர் நியமனம் தொடர்பாக மதுரை யைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ.கண் ணன், உள்ளிட்ட பலர் உயர் நீதி மன்றக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்களில், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கு 4.1.2018-ல் புதிய அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப் பட்டனர். இவர்களில் பலர் வழக்கறி ஞர் தொழிலில் போதிய அனுபவம் இல்லாதவர்கள், கட்டப்பஞ்சாயத் தில் ஈடுபடுபவர்கள், பார் கவுன்சி லின் ஒழுங்கு நடவடிக்கையை சந்தித்தவர்களும் அரசு வழக்கறி ஞர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

எனவே, புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள அரசு வழக்கறி ஞர்களின் பணி அனுபவம் குறித்து ஆய்வு செய்யவும், அரசு வழக்கறி ஞர் நியமனம் தொடர்பான அரசாணையை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுக்களில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஆதி கேசவலு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், கடந்த ஆண்டு அரசு வழக்கறிஞர்கள் நியமனம் விதிமுறைகளை பின் பற்றாமல் நடைபெற்றது. அனுப வம் இல்லாதவர்கள் அரசு வழக்கறி ஞர்களாக நியமிக்கப்படுவதால் வழக்குகள் தேங்குகின்றன. இந் நிலையில் புதிதாக அரசு வழக்கறி ஞர்களை நியமிக்க முடிவு செய்து பணிகள் நடைபெற்று வரு கின்றன எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, புதிதாக அரசு வழக்கறிஞர்களை நியமிக்க இடைக்காலத் தடை விதித்தும், ஏற்கெனவே நடைபெற்ற அரசு வழக்கறிஞர் நியமனம் தொடர் பான ஆவணங்களை தாக்கல் செய்யவும் தமிழக பொதுத்துறைச் செயலருக்கு நீதிபதிகள் உத்தர விட்டனர். விசாரணையை டிச.19-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x