Published : 28 Sep 2014 11:33 AM
Last Updated : 28 Sep 2014 11:33 AM

கர்நாடக போலீஸாரை கண்டித்து அதிமுகவினர் மறியல்

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய தையடுத்து, பெங்களூர் ஒசகொட்டா பகுதியில் குவிந்த அதிமுகவினர் 100க்கும் மேற்பட்டவர்கள் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்த போலீஸார், தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள அத்திப்பள்ளி வாகனங்களில் அழைத்து வந்து விட்டுவிட்டுச் சென்றனர்.

இதில் ஆத்திரமடைந்த அதிமுக வினர் கர்நாடக போலீஸாரை கண்டித்து பெங்களூர் - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன. தகவலறிந்த மாவட்ட எஸ்பி கண்ணம்மாள் தலைமையிலான போலீஸார், மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x