Published : 17 Dec 2018 09:44 AM
Last Updated : 17 Dec 2018 09:44 AM
சென்னை மற்றும் புறநகர் பகுதி களில் தொடர் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த பிரபல கொள்ளை யன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் 70-க்கும் மேற்பட்ட பெண் களை பலாத்காரம் செய்துள்ளதாக வும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் அம்பத்தூர், பட்டரைவாக்கம், முகப்பேர், கொரட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் கொள்ளைகள் நடைபெற்றன. மேலும், திருட்டு நடந்த வீட்டில் இருந்த பெண் கள் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந் தது. இதில் சம்பந்தப்பட்ட குற்ற வாளியை பிடிக்க, அம்பத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் ஐ.ஈஸ்வரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப் போது, பைக்கில் வந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர். அவர் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த அறிவழகன் (29) என்பது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்து நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி கள் கூறியதாவது:
பிடிபட்டவர் கிருஷ்ணகிரி அருகே உள்ள மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன். திருமுல்லைவாயலில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்துள்ளார். பெங்களூருவில் உள்ள ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணி செய்து வந்துள்ளார். அங்குள்ள பெண்களிடம் தவறாக நடக்க முயன்றதால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதன் பின் னர் சென்னை வந்தவர், பூட்டி யிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்து வந்துள்ளார். நகைத் திருட்டின்போது சம்பந்தப் பட்ட வீட்டில் பெண்கள் தனியாக இருந்தால் அந்த பெண்களை கொலை செய்து விடுவதாக மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.
கடந்த ஆண்டு வேளச்சேரி, குமரன் நகர், கிண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் இதேபோல் கைவரிசை காட்டிபோது கைது செய்யப்பட்டு 3 மாதங்களுக்கு முன்னர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அதன் பிறகும் பழைய படி நகை திருட்டு, பலாத்காரம் போன்ற செயல்களில் ஈடுபட்டுள் ளார். இதுவரை சுமார் 70க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்திருக்கலாம் என்று கருதப்படு கிறது. பலாத்கார காட்சிகளை செல்போனில் படம்பிடித்தும் வைத் துள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT