Published : 19 Dec 2018 08:32 AM
Last Updated : 19 Dec 2018 08:32 AM
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மரக்கன்றுகளை நடு வதற்காக அமெரிக்காவில் தமிழர் கள் சமீபத்தில் நடத்திய மொய் விருந்தில் ரூ.14 லட்சம் வசூலாகி உள்ளது.
தமிழகத்தில் கடந்த 16-ம் தேதி வீசிய கஜா புயலால் புதுக் கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில், அமெரிக்காவில் டல்லாஸ் வாழ் தமிழர்கள் சார்பில் 'தமிழ் மலரும் மையம்' என்னும் தமிழ்ப் பள்ளியின் முன்னெடுப்பில் பல்வேறு தமிழ் அமைப்புகளின் உதவியுடன் சமீபத் தில் மொய் விருந்து நடத்தப்பட்டது.
இதில், டல்லாஸ் நகரில் வசிக் கும் 250-க்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பங்களில் இருந்து சுமார் 700 பேர் கலந்துகொண்டு 20 ஆயிரம் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ.14 லட்சம்) மொய் செய்தனர்.
இந்த நிதி கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஏழை விவசாயிகளின் விளைநிலங்க ளில் வேரோடு சாய்ந்த மரங்களை அகற்றிவிட்டு புதிதாக தென்னை, பலா, எலுமிச்சை போன்ற கன்று களை வழங்க பயன்படுத்தப்படும் என அந்த அமைப்பு அறிவித்து உள்ளது. இதுகுறித்து அமெரிக்கா வின் டல்லாஸ் பகுதியில் மொய் விருந்து ஏற்பாடு செய்த 'தமிழ் மலரும் மையம்' நிர்வாகிகள் ஜெய்நடேசன், கீதாசுரேஷ், மொய் விருந்து ஒருங்கிணைப்பாளர் பிரவீனா ஆகியோர் கூறியது:
தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்வதற்காக டல்லாஸ் நகரில் வசிக்கும் தமிழ் குடும்பங் களின் சார்பில் தமிழ் கலாச்சாரப் படி நடத்தப்பட்ட மொய் விருந்தில் ரூ.14 லட்சம் மொய் வசூலானது. சிறப்பான விருந்தும் பரிமாறப் பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டோர் பல்வேறு உயர் பதவி களில் இருந்தாலும் அனைவரும் தரையில் அமர்ந்து சாப்பிட்டனர்.
இந்நிதியைக் கொண்டு, விவ சாய குடும்பங்களை தமிழ்நாடு பவுண்டேஷன் டல்லாஸ் மற்றும் கல்வியாளர்கள் சங்கமம் மூலம் தேர்வு செய்து மரக்கன்றுகள் நடப்ப டும் என்றனர். இதுகுறித்து கல்வி யாளர் சங்கமம் ஒருங்கிணைப் பாளர் ஆசிரியர் சதீஷ்குமார், "டல் லாஸ் வாழ் தமிழ் குடும்பங்களின் பங்களிப்பில் கிடைத்த மொய் விருந்து நிதியைக் கொண்டு, சாதாரண விவசாயிகளின் தோட்டங் களில் சாய்ந்து கிடக்கும் மரங்களை அகற்றி, புதிதாக நட மரக்கன்றுகள் வழங்கப்படும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT