Published : 02 Dec 2018 10:29 AM
Last Updated : 02 Dec 2018 10:29 AM

தொடர்ந்து கைவரிசை காட்டிய பிரபல கொள்ளையன் கைது: ரூ.39.90 லட்சம் பறிமுதல்

வட சென்னையில் பணம் கொண்டு செல்பவர்களை நோட்டமிட்டு தொடர் கொள்ளையில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்தவர் ரபீக்கான் (36). இவர் தனது செல்போன் கடை உரிமையாளர் கொடுத்த ரூ.10 லட்சத்தை எடுத்துக் கொண்டு கடந்த மாதம் 1-ம் தேதி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப் போது, அதேபகுதி ஆனைக்காரன் தெரு, பெரியண்ணன் தெரு சந்திப்பில் செல்லும்போது அங்கு வந்த கும்பல் ஒன்று ரபீக்கானைக் கத்தியால் குத்தி அவரிடமிருந்த பணத்தை பறித்துச் சென்றது.

இதுதொடர்பாக பூக்கடை போலீஸார் வழக்குப் பதிந்து 3 பேரைக் கைது செய்தனர். முக்கிய குற்றவாளி தலைமறைவாக இருந்தார். அவரைக் கைது செய்ய வட சென்னை காவல் கூடுதல் ஆணையர் ஆர்.தினகரன் உத்தரவிட்டார்.

அதன்படி, தனிப்படை போலீ ஸார் முக்கிய குற்றவாளியான தலைமறைவாக இருந்த செங்குன் றத்தைச் சேர்ந்த முத்துசரவணன் (27) என்பவரைக் கைது செய்தனர்.

இவர் பணம் கொண்டு செல்பவர் களை நோட்டமிட்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்தி தொடர்ந்து பணம் பறிக்கும் தொழிலுக்கு மூளை யாக செயல்பட்டு வந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இவர் மீது ஏற்கெனவே கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இவரிடமிருந்து ரூ.39 லட்சத்து 90 ஆயிரம் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x