Published : 03 Dec 2018 10:17 AM
Last Updated : 03 Dec 2018 10:17 AM

திண்டிவனம் அருகே துயரம்: நீரில் மூழ்கி 4 சிறார் மரணம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த சலவாதி கிராமத்தைச் சேர்ந்தவர் துரை முருகன். இவரது மகள் அபிராமி (17), மகன் திருமுருகன் (14), அவரது மைத்துனரின் மகள் அஸ் வினி(17), மகன் ஆகாஷ்(14). இவர்களில் அபிராமி, அஸ்வினி இருவரும் திண்டிவனத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தனர். திருமுருகன் மற்றும் ஆகாஷ் 9-ம் வகுப்பு படித்து வந்தனர்.

நேற்று விடுமுறை நாள் என்பதால் இவர்கள் 4 பேரையும் சலவாதி கிராமத்தில் உள்ள ஒரு குளத்தில் நீச்சல் கற்றுக்கொடுக்க துரைமுருகன் அழைத்துச் சென்றார்.

ஒரே நேரத்தில் 4 சிறார்களும் குளத்தில் இறங்கி நீச்சல் பயிற்சி பெற்றனர். நீச்சல் தெரியாததால் 4 சிறார்களும் ஒரே நேரத்தில் நீரில் மூழ்கினர். துரைமுருகன் அவர்களைக் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. கிராம மக்கள் பலரும் குளத்தில் இறங்கி அவர்களைத் தேடினர்.

இதில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் அபிராமி, திருமுருகன், அஸ்வினி, ஆகாஷ் ஆகியோர் சடலங்களாக மீட்கப்பட்டனர். இது குறித்து ரோஷனை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x