Published : 25 Dec 2018 09:50 AM
Last Updated : 25 Dec 2018 09:50 AM

இந்தோனேசியாவில் உயிரிழப்பு 400 ஆக உயர்வு

இந்தோனேசியாவின் சுந்தா ஜலசந்தியில் உள்ள சைல்டு எரிமலை வெடித்துச் சிதறியதால் நேற்று முன்தினம் இரவு சுனாமி பேரலைகள் உருவாகின. இதன்காரணமாக மேற்கு ஜாவா, தெற்கு சுமத்ரா தீவுப் பகுதிகளில் 222 பேர் உயிரிழந்தனர்.

இரவு நேரம் என்பதால் மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட் டது. இதைத் தொடர்ந்து நேற் றைய நிலவரப்படி உயிரிழந் தோர் எண்ணிக்கை 400 ஆக உயர்ந்துள்ளது. 1,500-க்கும் மேற் பட்டோர் படுகாயம் அடைந்துள் ளனர். பலரைக் காணவில்லை. அவர்கள் இறந்திருக்கக்கூடும் என்று கருதப்படுவதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x