Published : 06 Dec 2018 10:03 AM
Last Updated : 06 Dec 2018 10:03 AM
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினத்துக்கு சட்டவிரோதமாக டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்துக்கு விதிகளை மீறி டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் நேற்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி முறையீடு செய்தார்.
டிராபிக் ராமசாமி உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே எம்ஜிஆர் நூற்றாண்டு விழாக்களுக்கு விதிகளை மீறி டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டதாக வழக்கு தொடர்ந்து நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் நேற்று நீதிபதிகள் எம்.சத் தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகி யோர் அடங்கிய அமர்வில் டிராபிக் ராமசாமி ஆஜராகி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாவது நினைவு தினத்துக்காக சட்டவிரோதமாக டிஜிட்டல் பேனர்கள் சென்னையில் வைக்கப்பட்டுள்ள தாகத் தெரிவித்தார்.
அதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், “நாங்களும் வரும் வழியில் ஏராளமான பேனர்களைப் பார்த்தோம். ஏற்கெனவே டிஜிட்டல் பேனர்களுக்கு முறையாக அனுமதி பெற்ற பிறகே வைக்க வேண்டும் என்றும், அதில் அனைத்து விவரங்களும் இடம்பெற வேண்டும் எனவும் உத்தரவிட்டும் ஒரு பேனரிலும் அதற்கு உரிமம் வழங்கியது யார் என்ற எந்த விவரமும் இல்லை. உயர் நீதிமன்றம் பிறப்பிக்கும் எந்த உத்தரவுகளையும் அதிகாரிகள் சரியாக கடைபிடிப்பது இல்லை. இதேநிலை நீடித்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும்” என எச்சரித்து இந்த வழக்கை 7-ம் தேதிக்கு (நாளை) தள்ளி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT