Last Updated : 04 Dec, 2018 05:22 PM

 

Published : 04 Dec 2018 05:22 PM
Last Updated : 04 Dec 2018 05:22 PM

திருமணத்துக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு: காதலி இறந்த சோகத்தில் காதலனும் தற்கொலை

திருமணத்துக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்காத நிலையில் காதலி தற்கொலை செய்துகொண்டதால், துக்கம் தாங்காமல் காதலனும் தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புதுநகரைச் சேர்ந்தவர் ஹேமந்த் (21). இவர் தனியார் கம்பெனி ஊழியராக சென்னையில் பணியாற்றி வந்தார். சென்னையில் தங்கி வேலை பார்த்த போது மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்டினா(19) என்ற பெண்ணைக் காதலித்து வந்துள்ளார்.

தங்களது காதல் தொடர்பாக  இருவரும் பெற்றோர்களிடம் தெரிவிக்க திருமணத்திற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த கிறிஸ்டினா, கடந்த 28-ம் தேதி சென்னை மதுரவாயல் பகுதியில் தற்கொலை செய்து கொண்டார்.

காதலி தற்கொலை செய்து கொண்டதிலிருந்து கடந்த 3 நாட்களாக மனவருத்தத்தில் இருந்து வந்த ஹேமந்த் புதுச்சேரியில் உள்ள தனது வீட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஹேமந்த் தற்கொலை சம்பவம் குறித்து ரெட்டியார்பாளையம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x