Published : 27 Sep 2014 10:57 AM
Last Updated : 27 Sep 2014 10:57 AM

மூத்த குடிமக்கள் செல்போனில் 2-ஐ டயல் செய்தால் போலீஸ் உதவி

மூத்த குடிமக்கள் செல்போனில் 2-ஐ டயல் செய்தால் போலீஸ் உதவி உடனடியாக கிடைக்கச் செய்யும் புதிய முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் தனியாக வசிக்கும் மூத்த குடிமக்களை குறிவைத்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. அதைத் தொடர்ந்து தனியாக வசிக்கும் மூத்த குடிமக்களை பாதுகாக்கும் பணியில் சென்னை போலீஸார் தொடங்கியுள்ளனர்.

தனியாக வசிக்கும் முதியோர் களை போலீஸார் சந்தித்து அவர்க ளுடைய செல்போனில் அந்தந்த பகுதி போலீஸ் நிலைய எண்ணை பதிவு செய்து கொடுக்கின்றனர். பின்னர் அந்த எண்ணை ஸ்பீடு டயல் முறையில் எண் 2-ஐ டயல் செய்தால் போலீஸ் நிலையத்துக்கு அழைப்பு வரும் வகையில் செட்டிங் செய்து கொடுக்கின்றனர். மூத்த குடிமக்கள் அவசர உதவி தேவைப் பட்டால் தங்களது செல்போனில் எண் 2-ஐ மட்டும் அழுத்தி டயல் செய்தால்போதும். உடனே அருகே உள்ள காவல் நிலையத்துக்கு அழைப்பு வந்துவிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x