Published : 02 Dec 2018 10:59 AM
Last Updated : 02 Dec 2018 10:59 AM
காஷ்மீரில் உயிரிழந்த தமிழக வீரர் சரவணன் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வர் கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
மதுரை மாவட்டம், திருமங் கலம், கரிசல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல் என்பவர் மகன் ப.சரவணன். இவர், 20 இஎன்ஜிஏ ரெஜிமென்டில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம், டிராஸ் பகுதியில் நாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இவர், நவம்பர் 30-ம் தேதி மரண மடைந்தார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன். அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங் கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டின் பாதுகாப்பு பணியின் போது இறந்த சரணவன் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதி வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT