Published : 07 Dec 2018 10:08 AM
Last Updated : 07 Dec 2018 10:08 AM

துரைமுருகன் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை 4 வாரத்தில் பரிசீலிக்க உத்தரவு

திமுக பொருளாளர் துரைமுருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “கடந்த 2013-ல் பெறப்பட்ட எனது பாஸ்போர்ட் 2023 வரை செல்லத்தக்கது. அரசியல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அடிக்கடி வெளிநாடு சென்றதால் எனது பாஸ்போர்ட்டின் பக்கங்கள் தீர்ந்துவிட்டன.

இதையடுத்து புதிய பாஸ்போர்ட் வழங்கு மாறு அண்ணாசாலையில் உள்ள மண்டல பாஸ் போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்தேன். ஆனால் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.40 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக என் மீது தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதாகக்கூறி பாஸ்போர்ட் வழங்க அதிகாரி கள் மறுத்து விட்டனர். அந்த வழக்கில் இருந்து என்னை கீழமை நீதிமன்றம் விடுவித்து தீர்ப்பளித்துள்ளது. அந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு மட்டும் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது” என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, “துரைமுருகனுக்கு பாஸ் போர்ட் வழங்கக்கோரும் விண்ணப்பத்தை அதிகாரிகள் 4 வாரத்துக்குள் சட்டத்துக்குட்பட்டு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x