Published : 04 Dec 2018 10:28 AM
Last Updated : 04 Dec 2018 10:28 AM

நாகையில் 33 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்கள்

புயல் எச்சரிக்கை மற்றும் புயல் பாதிப்புகளின் காரணமாக நாகை மாவட்டத்தில் கடந்த நவ.1 முதல் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால் மாவட்டத்தில் உள்ள 1,500 விசைப்படகுகள், 3,500 பைபர் படகுகளில் கடலுக்குச் செல்லும் 1 லட்சம் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. மேலும், மீன்பிடி தொழில் சார்ந்த சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் வேலை இழந்து பாதிக்கப்பட்டனர். மாவட்டத்தில் மீன் சந்தைகள் வெறிச் சோடின.

இந்நிலையில், கடந்த 33 நாட்களுக்குப் பின்னர் நேற்று இரவு முதல் விசைப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லத் தொடங்கினர்.

இதனால் நாகை அக்கரைப் பேட்டை புதிய மீன் இறங்கு தளத் தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகுகளில், நேற்று காலை முதலே ஐஸ் கட்டிகளுடன் கூடிய பெட்டிகள், டீசல், அரிசி உட்பட அனைத்து பொருட்களையும் ஏற்றும் பணியில் மீனவர்கள், மீன் பிடி தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டனர். நேற்று நள்ளிரவு முதல் மீன்பிடி தொழில் தொடங்கி உள்ளதால் இன்னும் 4 நாட்களில் மீன்வரத்து அதிகரிக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x