கடும் குளிரின் தாக்கத்திலும் 5 நாட்களாக இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம்: 200-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

கடும் குளிரின் தாக்கத்திலும் 5 நாட்களாக இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம்: 200-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி
Updated on
2 min read

கடும் குளிரின் தாக்கத்திலும் இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் 5-வது நாளாக தொடர்ந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் இதுவரை 200-க்கும் அதிகமான வர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் தொடர்ந்து 5 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் தங்கள் குடும்பங் களுடன் இரவு, பகலாக தண்ணீர் மட்டும் குடித்து போராடி வருகின் றனர்.

இதுவரை உடல்நலக் குறை வால் 200-க்கும் அதிகமான ஆசிரியர் கள் ராயப்பேட்டை மருத்துவமனை யில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆயிரக்கணக் கான ஆசிரியர்கள் உடல் சோர்வடைந்து காணப்படுகின்றனர்.

இரவு நேரங்களில் கொசுத் தொல்லையுடன், குளிரும் வாட்டும் நிலையில் வெறும் தரையில் படுத்து ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். இந்த போராட்டத் துக்கு திமுக உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. எனினும், ஒரு நபர் குழு அறிக்கை தரும் வரை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என பள்ளிக்கல்வித் துறை உறுதியாக தெரிவித்துவிட்டது.

போராட்டம் தீவிரமானதால் சம்பவ இடத்தில் போலீஸாரும், மருத்துவக் குழுவினரும் தயாராக உள்ளனர். உடல் நலம் பாதிக்கப் பட்டு மயக்கமடைபவர்களுக்கு அங்குள்ள முகாமில் குளுக்கோஸ் ஏற்றப்படுகிறது. அதேநேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண் களுக்கு தேவையான கழிவறை வசதிகள் செய்து தரப்பட வில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதற்கிடையே துப்புரவு பணியாளர்களுக்கு இணையான ஊதியத்தையே அரசு தங்களுக்கு வழங்குவதை சித்தரிக்கும் விதமாக இடைநிலை ஆசிரியர்கள் நேற்று டிபிஐ வளாகத்தில் துப்புரவு பணிகளை மேற்கொண்டனர்.

இதுதொடர்பாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்க பொதுச்செயலாளர் ராபர்ட் கூறும்போது, ‘‘ஒருநபர் குழு அறிக்கை தாக்கல் செய்த பின்னர் தான் முடிவெடுக்க முடியும் என்று பள்ளிக்கல்வித் துறை செயலாளர் பிரதீப் யதாவ் கூறியுள்ளார். ஒருநபர் குழு அறிக்கை பெறாமல் ஊராட்சி செயலர்களுக்கு மட்டும் 3 மடங்கு ஊதியத்தை அரசு உயர்த்தியது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். பல அரசுத் துறைகளில் ஊதிய முரண்பாடுகள் இருப்பது உண்மைதான்.

ஆனால், எந்த துறையிலும் ஒருநாள் இடைவெளியில் பணியில் சேர்ந்ததற்கு ரூ.15 ஆயிரம் அளவுக்கு சம்பள வேறுபாடு இல்லை. எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை. விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்தாலும் போராட்டம் தொடரும்’’ என்றார்.

தேமுதிக ஆதரவு

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் 2-வது மகன் விஜய பிரபாகரன் ஆசிரியர் களை நேற்று நேரில் சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவளித் தார். தொடர்ந்து அவர் செய்தி யாளர்களிடம் கூறும்போது, ‘‘முதல்வர் பழனிசாமி இந்த வி‌ஷயத் தில் தலையிட்டு, இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும். அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் எனது தந்தை விஜயகாந்த் விரைவில் நலம் பெறுவார். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அவரது உடல்நிலை சரியாகி விடும்’’என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in