Published : 14 Dec 2018 07:25 AM
Last Updated : 14 Dec 2018 07:25 AM

கிராம சுகாதார செவிலியர்கள் 454 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் பழனிசாமி வழங்கினார்

திருப்பூரில் அறுவை அரங்குடன் ரூ.3 கோடியே 15 லட்சத்தில் கட்டப்பட்ட 2 மருத்துவமனைகளை திறந்துவைத்த முதல்வர் கே.பழனி சாமி, 454 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா,சட்டப்பேரவையில் கடந்த 2014-ம் ஆண்டு, அறிவித் ததற்கு ஏற்ப திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அரசு மருத்துவ மனையில் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பில் அறுவை அரங்குடன் கட்டப்பட்ட 54 படுக்கைகள் கொண்ட மருத்துவ கட்டிடத்தை முதல்வர் கே.பழனிசாமி திறந்து வைத்தார். மேலும், திருப்பூர், மடத்துக்குளம் அரசு மருத்துவ மனையில் ரூ.1 கோடியே 65 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அறுவை அரங்குடன் கூடிய 57 படுக்கைகள் கொண்ட மருத்துவ கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.

மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியத்தால் இதுவரை 24 ஆயிரத்து 664 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த் தப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்ககத்தில் துணை செவிலியர் பயிற்சிப் பள்ளிகளில் 18 மாத பயிற்சி முடித்த 454 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் முதல்வர் வழங்கினார்.

மேலும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை சார்பில் சேலம் சேகோசர்வில் ரூ.25 லட்சம் மதிப்பில் அமைக் கப்பட்டுள்ள மின்னணு ஏல மையம், மதுரையில் ரூ.25 லட்சம் செலவில் தாய்கோ வங்கியின் புதிய கிளை ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், சி.விஜயபாஸ்கர், பி.பெஞ்சமின், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், செயலர்கள் ஜெ.ராதாகிருஷ்ணன், தர்மேந்திர பிரதாப் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x