Published : 08 Dec 2018 09:58 AM
Last Updated : 08 Dec 2018 09:58 AM

புதுச்சேரியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய சென்னை கல்லூரி மாணவர்கள் கைது: ரூ.5 லட்சம் மதிப்பிலான 7 வண்டிகள் பறிமுதல்

புதுச்சேரியில் மோட்டார் சைக்கிள் திருடிய சென்னையைச் சேரர்ந்த கல்லூரி மாணவர்கள் இருவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள 7 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

புதுச்சேரி கோரிமேடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையிலான போலீஸார் ஜிப்மர் மருத்துவமனை அருகே நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த 3 பேரை மடக்கி விசாரணை நடத்தினர்.

அவர்கள் வந்தது திருட்டு மோட்டார் சைக்கிள் என்பது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் சென்னை மாடம்பாக்கத்தைச் சேர்ந்த மூக்கையன் மகன் நாகேஷ்வர ராஜா (18), பல்லாவரம் வீரபத்திரன் மகன் மதன்குமார்(18) மற்றும் 17 வயது சிறுவன் ஓருவர் என்பதும் தெரிய வந்தது.

இதில் ராஜா மற்றும் மதன்குமார் சென்னையில் ஒரு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகின்றனர். இவர்கள் 3 பேரும் அடிக்கடி புதுச்சேரிக்கு வந்து பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடி விற்று வந்தது விசாரணையில் தெரியவந்தது.

3 பேரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து திருடப்பட்ட 7 மோட்டார் சைக்கிள் களை பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப் படுத்தினர். இதில் 2 பேரை காலாப் பட்டு மத்திய சிறையிலும், 17 வயது டைய சிறுவனை சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியிலும் ஒப்படைத்தனர்.3 பேரும் அடிக்கடி புதுச்சேரிக்கு வந்து பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடி விற்று வந்தது விசாரணையில் தெரியவந்தது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x