Published : 17 Sep 2014 10:23 AM
Last Updated : 17 Sep 2014 10:23 AM
'வி கேர்' நிறுவனத்திற்கு சொந்தமான 12 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
முடி மற்றும் தோல் தொடர்பான பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கும் நிறுவனம் 'வி கேர்'. இந்தியா முழுவதும் இந்நிறுவனத்தின் கிளை கள் உள்ளன. இந்நிலையில் இந்நிறு வனம் தொடர்பான இடங்களில் நேற்று வருமான வரித்துறையினர் திடீரென சோதனை நடத்தினர். சென்னை தி.நகரில் உள்ள இந்நிறு வன அலுவலகம் மற்றும் கிளினிக், சாலிகிராமத்தில் உள்ள இந்நிறுவன உரிமையாளரின் வீடு உட்பட 5 இடங்களிலும், கோவையில் ஒரு இடத்திலும், புதுவையில் 3 இடங்க ளிலும், ஐதராபாத்தில் 2 இடங்களிலும், பெங்களூரில் ஒரு இடத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதுகுறித்து வருமான வரித் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, "வி கேர் நிறுவனம் ரூ.10 கோடி வருமான வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின் பேரில்தான் இந்த சோதனை நடைபெறுகிறது" என்றார்.
சோதனையின் முடிவில் ஏராளமான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். அவற்றை ஆராய்ந்த பின்னர்தான் எவ்வளவு வரி ஏய்ப்பு நடந்துள்ளது என்ற விவரங்கள் தெரியவரும் என்று அதிகாரிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT