Published : 16 Dec 2018 09:10 AM
Last Updated : 16 Dec 2018 09:10 AM

ஆயிரம்விளக்கில் நாய்களுக்கு விஷம் வைத்து கொலை: தனிப்படை போலீஸார் விசாரணை

ஆயிரம் விளக்கு பகுதியில் 25-க் கும் மேற்பட்ட நாய்களுக்கு உணவில் விஷம் வைத்து கொன்றவர்கள் குறித்து தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள மக்கீஸ் கார்டன் பகுதிக்கு பின்புறம் கூவம் ஆறு ஓடுகிறது. இதன் கரையோரம் நேற்று முன்தினம் 25-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள், 10-க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்தன. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், ஆயிரம் விளக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸாரின் விசாரணையில் உணவில் விஷம் கலந்து கொடுத்து நாய்களும், காகங்களும் கொல்லப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து விலங்குகள் நல ஆர்வலர் ஏ.எஸ்.மகாதேவன் ஆயிரம் விளக்கு காவல் நிலை யத்தில் புகார் அளித்துள்ளார். புகார் மனுவில் அவர் கூறியிருப்ப தாவது:

போரூரில் விலங்கு நல அறக் கட்டளை நடத்தி வருகிறேன். சென்னை ஆயிரம் விளக்கு மக்கீஸ் கார்டன் கூவம் கரையோரம் நாய்கள் இறந்து கிடப்பதாக எனக்கு தகவல் கிடைந்தது. அதன் பேரில் அங்கு சென்று பார்த்தபோது 25-க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்து கிடந்தன. அங்கு நாய்க்கு வைத்த உணவை சாப்பிட்ட பல காகங்களும் இறந்து கிடந்தன. நாய்களை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நாய்களுக்கு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

புகார் மனுவை பெற்றுக் கொண்ட போலீஸார், இதுதொடர் பாக வழக்கு பதிந்துள்ளனர். மேலும், நாய்கள் மற்றும் காகங்களின் இறப்பு குறித்து கண்டறிய தனிப்படை அமைத் துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x