Published : 16 Sep 2014 12:39 PM
Last Updated : 16 Sep 2014 12:39 PM

பராமரிப்புப் பணி காரணமாக சென்னை எழும்பூர் - புதுவை ரயில் போக்குவரத்தில் மாற்றம்

செங்கல்பட்டு அருகே பராமரிப்புப் பணிகள் நடப்பதால், சென்னை எழும்பூர் – புதுச்சேரி, திருப்பதி – புதுச்சேரி பயணிகள் ரயில்கள் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வேநேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

செங்கல்பட்டு அருகே உள்ள ஒட்டிவாக்கத்தில் பராமரிப்புப் பணிகள் நடப்பதால் சென்னை எழும்பூர் – விழுப்புரம் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்தில் இன்றும், நாளையும் (செப். 16, 17) மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் – புதுச்சேரி – சென்னை எழும்பூர் பயணிகள் ரயில்கள் (எண்: 56037 - 56038) செங்கல்பட்டு – புதுச்சேரி இடையே ரத்து செய்யப்படுகின்றன.

திருப்பதி – புதுச்சேரி – திருப்பதி பயணிகள் ரயில்கள் (எண்: 56041 - 56042) செங்கல்பட்டு – புதுச்சேரி இடையே ரத்து செய்யப்படுகின்றன என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x