Published : 24 Dec 2018 10:25 AM
Last Updated : 24 Dec 2018 10:25 AM

அதிமுகவில் இணைய தகுதி நீக்க எம்எல்ஏக்கள் 4 பேர் தூது விட்டதாக ஓபிஎஸ் தகவல்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பேசியதாவது: ஆண்டிபட்டி தொகுதிக்கு எந்த வளர்ச்சிப் பணியும் செய்யவில்லை எனக் கூறி தங்கதமிழ்ச்செல்வன் உண்ணாவிரதம் இருந்தார். அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு ரூ.1,088 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆண்டிபட்டி தொகுதியில் யாரை நிறுத்தினாலும் நாங்கள் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம்.

தினகரனை நம்பிச் சென்றோர் தற்போது செல்லாக்காசாக உள்ளனர். அதிமுகவை எதிர்த்து யார் நின்றாலும் அவர்களுக்கு இந்நிலைதான் ஏற்படும். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ.க்களில் நான்கு பேர் மீண்டும் அதிமுகவில் இணைய என்னிடம் தூதுவிட்டுள்ளனர். அதிமுக தொண்டர்கள் தற்போதே தேர்தல் பணியை தொடங்க வேண்டும். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x