

கஜா புயல் பாதிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்ததாகவும், ஆனால் திமுக இதுதொடர்பாக தவறான பிரச்சாரம் செய்து வருவதாகவும் தமிழிக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியள்ளார். இதுதொடர்பான ஆதாரத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘கஜாபுயலுக்கு பிரதமர் ஒரு ட்விட்டர் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என அவதூறு பேசும் திமுகபொருளாளர் தவறான தகவல் தந்துள்ளார். பிரதமர் மோடி வட மாநில தேர்தல் பரப்புரைக்கு நடுவே தமிழகத்திற்கு அவசரஉதவிகள் செய்ய ஆணையிட்டு ட்விட்டரில் வருத்தத்தை பதிந்துள்ளார். பொய்யுரை பரப்புவர்களுக்கு இதோ ஆதாரம்’’ எனக் கூறியுள்ளார்.