கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்: சாந்தோம், லஸ், பரங்கிமலை தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்: சாந்தோம், லஸ், பரங்கிமலை தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
Updated on
1 min read

சென்னையில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. நள்ளிரவில் நடந்த சிறப்பு பிரார்த்தனைகளில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

இயேசு கிறிஸ்து பிறந்த நாளான கிறிஸ்துமஸ் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கோலாகலமாகக் கொண்டாடினர். சென்னையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் வண்ண விளக்கு களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

இயேசு கிறிஸ்து மாட்டு தொழு வத்தில் பிறந்தார் என்பதை விளக் கும் வகையில் தேவாலயங்களில் குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன. வண்ண மலர்களாலும் அலங்கரிக் கப்பட்டிருந்தன. சென்னை சாந் தோம் பேராலயத்தில் சென்னை மயிலை உயர் மறைமாவட்ட ஆர்ச் பிஷப் ஜார்ஜ் அந்தோணிசாமி நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் கிறிஸ்துமஸ் திருப்பலி நிறைவேற்றினார். ஆயிரக்கணக் கான கிறிஸ்தவர்கள் திருப்பலியில் பங்கேற்றனர். ஒருவருக்கு ஒருவர் கைகுலுக்கி கிறிஸ்துமஸ் வாழ்த்து களைப் பரிமாறிக் கொண்டனர்.

இதேபோல், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத் தலம், மயிலாப்பூர் பிரகாச மாதா ஆலயம் (லஸ் சர்ச்), ராயப்பேட்டை காணிக்கை அன்னை ஆலயம், எழும்பூர் திரு இருதய ஆண்டவர் திருத்தலம், புதுப்பேட்டை புனித அந்தோணியார் ஆலயம், பாரிமுனை தூய மரியன்னை இணை பேராலயம், பரங்கிமலை புனித தோமையார் ஆலயம் உள் ளிட்ட கத்தோலிக்க தேவாலயங் களிலும் நள்ளிரவு கிறிஸ்துமஸ் திருப்பலி நடைபெற்றது.

சிஎஸ்ஐ திருமண்டல தலைமை ஆலயமான கதீட்ரல் பேராலயம், வேப்பேரி புனித அந்திரேயா ஆலயம், மயிலாப்பூர் குட் ஷெப்பர்டு ஆலயம், ராயப்பேட்டை வெஸ்லி ஆலயம், எழும்பூர் புனித திருமுழுக்கு யோவான் ஆலயம் உள்ளிட்ட சிஎஸ்ஐ ஆலயங்களிலும் நள்ளிரவு கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.

கேக் வெட்டி உற்சாகம்

இதனால், நேற்று முன்தினம் நள்ளிரவு தேவாலயங்களில் கிறிஸ் தவர்கள் கூட்டம் அலைமோதியது. இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் கேக் வெட்டி, சிறப்பு ஆராத னைகளுக்கு வந்தவர்களுக்கு வழங்கப்பட்டது.

மறைமலைநகர் தூய விண் ணரசி அன்னை ஆலயம், காட்டாங் கொளத்தூர் அன்னை லூர்து ஆலயம் உட்பட சென்னையில் புறநகர் பகுதியில் உள்ள தேவாலயங்களிலும் நள்ளிரவு திருப்பலி மற்றும் சிறப்பு பிரார்த் தனைகளில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி நேற்று முன்தினம் இரவு அனைத்து தேவாலயங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in