Published : 30 Nov 2018 10:08 AM
Last Updated : 30 Nov 2018 10:08 AM
மக்கள் நீதி மய்ய கட்சியின் துணைத் தலைவராக டாக்டர் ஆர்.மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப் படையில் மக்கள் நீதி மய்ய கட்சியின் துணைத் தலைவராக டாக்டர் ஆர்.மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், கட்சி உறுப்பினர்கள் அனைவரும் மகேந்திரனுக்கு கட்சிப் பணியில் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT