Published : 09 Nov 2018 10:44 AM
Last Updated : 09 Nov 2018 10:44 AM

கருப்பு, சிவப்பு வண்ணத்துக்கு சொந்தம் கொண்டாட எந்த கட்சிக்கும் ஏகபோக உரிமை கிடையாது: உயர் நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் பதில் மனு

டிடிவி தினகரனின் அமமுக கொடி, அதிமுக கொடி போல இருப்பதாகக் கூறி அந்தக் கொடியைப் பயன்படுத்த தினகரனுக்கு தடை விதிக்க வேண்டுமென முதல்வர் கே.பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில், ‘‘அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அதிமுக கொடி போலவே தனது கொடியை யும் வடிவமைத்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை யும், அம்மா என்ற பெயரை யும் கொடியில் பயன்படுத்தி, தன்னை ஜெயலலிதாவின் வாரிசு என்பது போல காட்ட முயற்சிக்கிறார்’’ என்று முதல்வர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் டிடிவி தினகரன் தரப்பில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட கூடு தல் மனுவில், ‘‘தமிழகத்தில் கறுப்பு, சிவப்பு வண்ணம் என்பது யாராலும் தவிர்க்க முடியாத ஒன்று. பெரியார், அண்ணா, எம்ஜிஆர் காலங் களில் இருந்தே இந்த வண்ணங்கள் பயன் படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல கறுப்பு, சிவப்பு வண்ணத்தை கட்சிக் கொடி யில் பயன்படுத்த எந்த கட்சிக் கும் ஏகபோக உரிமை கிடை யாது. எனவே இதுதொடர் பாக தமிழக முதல்வர் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.கல்யாண சுந் தரம், வழக்கு விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x