Published : 28 Nov 2018 10:24 AM
Last Updated : 28 Nov 2018 10:24 AM

குரூப்-4 தேர்வுக்கு டிசம்பர் 3 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

டிஎன்பிஎஸ்சி செயலாளர் கே.நந்தகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

குரூப்-4 பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு கடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடந்தது. தேர்வெழுதிய விண்ணப்பதாரர்களின் மதிப்பெண் விவரம் ஜூலை 30-ம் தேதி தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இத்தேர்வு தொடர்பான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னை பிராட்வே பஸ் நிலையம் அருகேயுள்ள தேர்வாணைய அலுவலகத்தில் டிசம்பர் 3 முதல் நடைபெற உள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட் டுள்ள விண்ணப்பதாரர்களின் தரவரிசை மற்றும் அழைப்புக் கடிதம் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x