Published : 26 Nov 2018 09:52 AM
Last Updated : 26 Nov 2018 09:52 AM

பேரிடராக அறிவிப்பது குறித்து மத்திய அமைச்சர் விளக்கம்

நாகர்கோவில்

புயல் பாதிப்பை பேரிடராக அறிவிப்பது மத்தியக் குழுவின் அறிக்கையை பொறுத்து அமையும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பிரதமர் மோடி பேசிய 50-வது மான் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சி நாகர்கோவிலில் பெரிய திரை மூலம் மக்களுக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய அமைச் சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிக ளுக்கு 3 கட்டங்களாக சென்றுள் ளேன். அங்கு ஏற்பட்டுள்ள அழிவு சாதாரணமானது அல்ல. ரூ.16,000 கோடியை நிவாரண நிதியாக தமிழக அரசு கேட்டுள்ளது. மத்தி யக் குழு அறிக்கைக்கு பின்னர் அதுகுறித்து முடிவெடுக்கப்படும்.

தேசிய பேரிடராக அறிவிப்பதும் குழுவின் அறிக்கையை பொறுத்தே அமையும். புயலால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் நிவாரண உதவிகள் கிடைக் கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. மாநில அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மத்திய அமைச்சர் கூறினார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x