Published : 29 Nov 2018 09:36 AM
Last Updated : 29 Nov 2018 09:36 AM

புயல் பாதித்த மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த அவகாசம்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மின் நுகர்வோர்களில் நவம்பர் 15-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் அபராதமின்றி நவ. 30-ம் தேதி வரை கட்டணம் செலுத்தலாம் என ஏற்கெனவே மின்வாரியம் அறிவித்திருந்தது.

தாழ்வழுத்த மின்சாரம் பயன்படுத்தும் மின் நுகர்வோர் மட்டும் அபராதமின்றி டிசம்பர் 5-ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x