மாணவர்களின் பன்முகத்தன்மையை கண்டறிந்து ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும்: சைதை துரைசாமி கருத்து

மாணவர்களின் பன்முகத்தன்மையை கண்டறிந்து ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும்: சைதை துரைசாமி கருத்து
Updated on
1 min read

மாணவர்களின் பன்முகத்தன் மையை கண்டறிந்து, ஆசிரியர்கள் அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என மனித நேய ஐஏஎஸ் இலவச கல்வி அறக்கட்டளை நிறுவனர் சைதை சா.துரைசாமி தெரிவித் துள்ளார்.

மனிதநேய ஐஏஎஸ் இலவச கல்வி அறக்கட்டளை சார்பில் சென் னையில் உள்ள 70 மாநகராட்சி மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளின் நூலகங்களுக்கு மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையிலும் பொது அறிவை வளர்த்துக் கொள் ளும் வகையிலுமான புத்தகங்கள் வழங்கும் விழா சிஐடி நகரில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று நடை பெற்றது.

விழாவில் அறக்கட்டளை நிறுவனர் சைதை சா.துரைசாமி பங்கேற்று புத்தகங்களை வழங்கி னார். இந்த விழாவில் அவர் பேசியதாவது:

நூல்களை படிக்க வேண்டும்

கல்வி புகட்டும் ஆசிரியர்கள், மாணவர்களின் பன்முகத்தன்மை யை கண்டறிந்து அவர்களை ஊக்கு விக்க வேண்டும். நேர்மையான மாணவர்களை உருவாக்க வேண் டும். மாணவர்களின் திறமையை புரிந்து கொண்டு அவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

தற்போதைய சூழலில் அரசு வேலை என்பது போட்டித் தேர்வு கள் மூலமாகவே கிடைக்கும் என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். நூலகங் களுக்கு வழங்கப்படும் புத்தகங் களை மாணவர்கள் படிப்பதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். செய்தித்தாள்கள் படித்து அனைவரும் பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். வெற்றியாளர்கள் பலர் நல்ல நூல்களைப் படித்தே வெற்றி பெற்றுள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாவட்ட கல்வி அதிகாரி கோவிந்தசாமி, கூடுதல் கல்வி அதிகாரி பாரதிதாசன், உதவி கல்வி அதிகாரி சாந்தி, பள்ளித் தலைமை ஆசிரியர் அருள்செல்வி மற்றும் பிற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில், ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 42 புத்தகங்கள் அடங்கிய தொகுப்பு, மொத்தம் ஏழு லட்சம் ரூபாய்க்கு வழங்கப் பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in