சென்னையில் நாளை வரை மழை தொடரும்: தமிழ்நாடுவெதர்மேன் தகவல்

சென்னையில் நாளை வரை மழை தொடரும்: தமிழ்நாடுவெதர்மேன் தகவல்
Updated on
1 min read

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று பெய்தது போன்று மழை நாளை வரை தொடரும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவி்த்துள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேன் என்ற பெயரில் எழுதிவரும் பிரதீப்ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளதாவது:

கடந்த 12 மணிநேரமாக மழை மேகங்கள் சென்னையை விட்டு வெளியேதான் நகராமல் இருக்கின்றன. கடந்த 12 மணிநேரமாக அனைத்து மழைநீரும் கடலில் கொட்டி வீணாகி வருகிறது. இப்போதுதான் கடற்கரைப்பகுதியில் இருந்து மழை மேகங்கள் சென்னைக்குள் நகரத் தொடங்கி இருக்கிறது. இதனால், கிழக்கு கடற்கரைச்சாலை, சிறுசேரி பகுதிகளில் காற்றுபலமாக வீசி மழை பெய்துவருகிறது. சென்னையின் இதர பகுதிகளில் இரவு நேரங்களில் நிதானமாக மழை பெய்யக்கூடும்.

இன்று நிலவிய இதே நிதானமான மழைதான் நாளை நண்பகல் வரை தொடரும். என்னதான் நாம் மழையைப்பெற்றாலும், சென்னைக்கு போதுமான அளவு மழை நீர் கிடைக்கவில்லை. பற்றாக்குறை மழையாகத்தான் இருக்கிறது.

டிசம்பர் மாதம், 2-வது வாரத்தில் நம்முடைய கடற்பகுதிக்கு “எம்ஜேஓ” வரும் என எதிர்பார்க்கிறேன், அதுவரை பொறுத்திருப்போம். அதேசமயம் பற்றாக்குறை பருவமழையை சென்னை தாண்டிவருவது கடினம்தான்.

ேமலும் நாளையும், நாளைமறுநாள்(23-ம்தேதி) “புல் எபெக்ட்” மூலம் நமக்கு மழை கிடைக்கும். அதன் பின் 24-ம் தேதியில் இருந்து தமிழகம் முழுவதிலும் வறண்ட வானிலையே காணப்படும்.

கடந்த 12 மணிநேரமாக மேகக்கூட்டங்கள் நகராமல் கடற்பகுதியிலேயே இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. நம்முடைய கடற்பகுதிக்கு “எம்ஜேஓ” வரும்வரை என்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவுகள் ஏதும் இருக்காது. அதாவது டிசம்பர் -2-வது வாரம் வரை.

2007-ம் ஆண்டில் இதுபோலத்தான் சூழல் நிலவியது. ஆனால், அந்த ஆண்டில் டிசம்பர் மாதத்தில் பெய்த மழை நம்மை காப்பாற்றியது. அதுபோல் இந்த ஆண்டும் நடக்கும் என நம்பலாம்.

இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in