Published : 16 Nov 2018 10:58 AM
Last Updated : 16 Nov 2018 10:58 AM
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த கஜா புயல் நேற்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையே கரையை கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், புயல் கரையை கடக்கும்போது அதிவேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், சில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதையடுத்து, தஞ்சாவூர் மாவட்ட கடலோர கிராம மக்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் தற்காலிக முகாம்களில் மின்சார வசதி அளிக்க நவீன ஜெனரேட்டர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. தஞ்சாவூர் மாவட்ட கடலோர பகுதிகளான அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் மற்றும் பேராவூரணி, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதி களில் மாவட்ட நிர்வாகம், காவல் துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறையினரும் இணைந்து முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டனர்.
அதிராம்பட்டினம் பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையம் உள்ளிட்ட இடங்களில், மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், தமிழக பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலருமான பிரதீப் யாதவ், மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் த.செந்தில்குமார் ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டு, உரிய அறிவுரைகளை வழங்கினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT