Published : 29 Nov 2018 10:06 AM
Last Updated : 29 Nov 2018 10:06 AM

பிரதமர் வராதது ஏன்? சரத்குமார் கேள்வி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக கூட்டணியில் இருந்தபோது மக்களின் தேவைகளை எடுத்துச்சொல்ல முடியாத நிலையில் இருந்தோம். இனி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு, வரும் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு மக்களுக்குத் தேவையானவற்றை செய்வதற்கு சமத்துவ மக்கள் கட்சி தயாராகி வருகிறது. இனி வரும் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம்.

மூன்று முறை முதல்வராக இருந்த பிரதமர் நரேந்திர மோடி, இயற்கைப் பேரிடர் நடந்த பகுதிகளைப் பார்வையிடாமல் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்வது வேதனைக்குரியது. மீட்பு நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு உறுதுணை புரிய வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x