Published : 22 Nov 2018 10:59 AM
Last Updated : 22 Nov 2018 10:59 AM

கொடைக்கானலுக்கு 5 நாட்களுக்கு பிறகு பேருந்து சேவை

கொடைக்கானல்

புயல் தாக்கியதில் கொடைக் கானல் மலைப் பாதையில் பல இடங்களில் மண் சரிவு, மரங்கள் சாய்ந்தால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

கொடைக்கானல் - வத்தல குண்டு சாலையில் குருசரடி பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால், கொடைக்கானலுக்கு வாகனங்கள் செல்வது தடை பட்டது. அதன்பின், தற்காலிக மாக சீரமைக்கப்பட்டு 2 நாட்க ளுக்கு முன்பு இலகுரக வாகனங் கள் இயக்க அனுமதிக்கப்பட்டது. தொடர்ந்து மணல் மூட்டைகளை அடுக்கி மண் சரிவை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றன. இப்பணி யின்போது மீண்டும் மண் சரிவு ஏற்பட்டதால் கற்களை கொண்டு கான்கிரீட் அமைத்து, அதன் மேல் 2,000 மணல் மூட்டைகளை அடுக்கி மண் சரிவு சீரமைக்கப்பட் டது.

பணிகள் நிறைவடைந்த நிலை யில் 5 நாட்களுக்குப் பிறகு நேற்று காலை முதல் கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. இதையடுத்து பேருந்துகள் இயக் கப்பட்டன. கொடைக்கானல் மேல்மலை கிராமங்கள், வத்தல குண்டு சாலை, பழநி சாலை அனைத்தும் சீரமைக்கப்பட்ட தால் போக்குவரத்து சேவை வழக்கம்போல் நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x