Published : 30 Nov 2018 10:48 AM
Last Updated : 30 Nov 2018 10:48 AM

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் அவகாசம் கோரி கடிதம்: மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் தகவல்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் அவகாசம் வழங்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது என தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

புயல் பாதித்த பகுதிகளில் கொசுக்களால் தொற்று நோய் உருவாவதை தடுக்க கூடுதலாக மருத்துவக் குழுக்களை அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கொடியசைத்து மருத்துவக் குழுக்களை அனுப்பிவைத்தார்.

நிகழ்ச்சிக்குப் பின், மக்கள் நல் வாழ்வு, குடும்ப நலத்துறை முதன்மைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

தமிழகத்தில் புயல் பாதித்த மாவட்டங்களில் வசிக்கும் மாணவ, மாணவிகள் தங்களுடைய கல்விச் சான்றுகள் அனைத்தையும் இழந்து, நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். இந்நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நவ. 30 (இன்று) கடைசி நாள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட பொதுநல வழக்கில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு ஒரு வாரம் கால அவகாசம் கொடுத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மேலும் அவகாசம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x