Published : 26 Nov 2018 09:59 AM
Last Updated : 26 Nov 2018 09:59 AM
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே கோமளப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பக்கிரியம்மாள்(65). கணவரை இழந்த இவர், அதே ஊரில் தனது மகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில், கஜா புயலால் இவர்களின் வீடு சேதமடைந்ததைத் தொடர்ந்து, கோமளப்பேட்டை அரசுப் பள்ளியில் உள்ள புயல் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டார். புயலடித்து 10 நாட்களாகியும், அவர்களின் வீட்டை சீரமைக்க முடியாததால், முகாமிலேயே தங்கும் நிலை ஏற்பட்டது.
மேலும், இப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்ததால், கடுங்குளிர் வாட்டியது. இதையடுத்து, குளிர் தாங்க முடியாத பக்கிரியம்மாள் முகாமிலேயே நேற்று உயிரிழந்தார். தகவலறிந்து வந்த அதிகாரிகள், பக்கிரியம்மாளின் சடலத்தை, மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT